முருங்கையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த முருங்கையின் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
பொருந்திய இந்த முருங்கை பூவை தேநீராக பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
முருங்கைப்பூ தேநீர் எப்படி செய்வது?
முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தால் முருங்கைப்பூ தேநீர் ரெடி.
முருங்கைப்பூ தேநீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
- சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.
- வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுத்தலாம்.
- சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் குடிப்பதனால் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.