கொடூராமான முறையில் கணவனின் சடலம் மீட்பு-மனைவி கைது!

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில், வந்தாறு மூலை, மூங்கிலடி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது 35) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நபருக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவ தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் திங்கட்கிழமை 14.01.2019 சந்தேகத்தின் பேரில் மனைவியைக் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.