இரண்டு தினங்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற தொடர் மரணங்கள் தொடர்பான புலனாய்வு வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தில் கொள்ளை குற்றவாளியான சயன் தமிழக அரசு மீது கடுமையான ஒரு குற்றச்சாட்டை தெரிவிக்கும் காணொளி வைரலாக பரவி வருகிறது. இதில், தனது கூட இருந்தவர் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சயன தெரிவிக்கிறார். மேலும், இந்த விவகாரத்தின் சிபிஐ போன்ற மத்திய போலீஸ் விசாரணை நடத்தினால் நான் அனைத்து உண்மையையும் கூற தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
“கொடநாடு கொலை கொள்ளை குற்றங்களில் இருந்து தான் மட்டும் தப்பிக்க கூலிப்படையினர் மீது கஞ்சா கேஸ் போடும் எடப்பாடி பழனிசாமி”
– உண்மையை உடைக்கும் சயன்!#KodanadMurder pic.twitter.com/lXkIOnvYKr
— #DMK4TN (@DMK4TN) January 13, 2019
இதற்கிடையே, கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையில் தனிப்படை ஒன்று டெல்லி விரைந்து உள்ளது. கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சயான், மனோஜ், ரவி ஆகியோரை பிடிக்கவும் தனிப்படை ஒன்று கேரளா விரைந்த நிலையில், நேற்று மாலை சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து, அவர்களை சென்னை அழைத்து வந்து, இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ் வெளியிட்டுள்ள மற்றும் ஒரு காணொளியில், 5 கொலைகளை செய்தது எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நான் உறுதியாக நாமுகிறேன் என்றும், முத்யள்வர் பழனிச்சாமி ஒரு நாள் சிக்கரைக்கு செல்வது உறுதி என்றும் ஒரு காணொளி வெளியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எடப்பாடி பழனிசாமி
5 கொலைகள் செய்துள்ளதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள என்னை என்ன செய்தாலும் நிச்சயம் எடப்பாடி சிறைக்கு செல்வார்”– தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ்.#KodanadMurder pic.twitter.com/vLWA0Ngg67
— #DMK4TN (@DMK4TN) January 13, 2019