சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை அடுத்துள்ள மாரிமுத்து சாலை பகுதியை சார்ந்தவர் கண்ணன் (55)., இவர் திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு வரன்களை காண்பித்து திருமணம் முடித்து வைக்கும் தரகராக பணியாற்றி வருகிறார்.
ஆத்தூர் அருகேயுள்ள தாண்டவராயபுரத்தை சார்ந்தவர் சக்திவேல்., கொத்தனாராக பணியாற்றி வருகிறார். மேலும்., அதே பகுதியை சார்ந்தவர்கள் விசுவநாதன் மற்றும் பாலமுருகன்.
இவர்கள் மூவரும் கண்ணனை தொடர்பு கொண்டு கேரளாவை சார்ந்த பெண் ஒருவரை தனக்கு திருமணம் முடித்து வைக்கக்கூறி மூவரும் தனித்தனியே தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மூவரும் ஒரே பெண்ணை மனக்கவிரும்பியதை வியாபார ரீதியிலான நினைவில் இருந்த கண்ணன் சித்து வேளைகளில் ஈடுபட துவங்கியுள்ளார். இதன் மூலமாக மூவரையும் தனித்தனியே கேரளத்து பெண்ணை நிச்சியம் செய்வதற்கு அழைத்து சென்று காண்பித்துள்ளார்.
அதன் படி இவர்கள் மூவரிடமும் இருந்தும் தலைக்கு ரூ.65 வரையிலும்., தங்க மோதிரம் மூன்றும் நூதன முறையில் மோசடி செய்துள்ளார். மேலும்., அவர்களிடம் பேருந்துக்கான பயணம்., சாப்பாடு செலவு மற்றும் இதர செலவுகள் என்று கொள்ளையடித்துள்ளார்.
நிச்சியக்கப்பட்ட பெண்ணை அவரவர் அலைபேசியில் புகைப்படம் எடுத்துவைத்துள்ளனர். இந்நிலையில்., “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்ற பழமொழிக்கேற்றார் போலவே புகைப்பட ஆதாரம் மூலம் புரோக்கர் சிக்கியுள்ளான்.
இதனை அறிந்த மூவரும் கடும் கோபத்திலும் பெண் யாருக்கென்று பேசிக்கொண்ட சம்பவம் வடிவேல் காமெடி போலவே சிரிப்பை வரவழைத்துள்ளது.