இறந்து கிடந்த பிச்சைக்காரரிடம் இருந்த பணம்: எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் செயற்கை கால்கள் உள்ளே இருந்த ரூ.96000 பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஷெரீப் சப் என்பவர் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஷெரீப் அதே இடத்தில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷெரீப் சடலத்தை தூக்கிய நிலையில், அவரின் செயற்கை கால் கனமாக இருப்பதை உணர்ந்தனர்.

இதையடுத்து அதன் உள்ளே பார்த்த போது 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள், 50 ரூபாய் நோட்டுகள், 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகளும் அதிகளவில் இருந்தன.

மொத்தமாக அதில் ரூ.96,000 இருந்தது. ஷெரீப்பின் சகோதரி ஹைதராபாத்தில் இருப்பதை கண்டுப்பிடித்த பொலிசார் அவருக்கு தகவல் கொடுத்தனர்.

இயற்கைக்கு மாறான இறப்பாக பொலிசார் இதை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிச்சைக்காரர் ஷெரீப்பின் கால் அழுகியதால் அது வெட்டப்பட்டு, செயற்கை கால் பொருத்தப்பட்டது தெரியவந்துள்ளது.