இன்று முதல் அமலாகிறது பிளாஸ்டிக் தடை! மீறினால் சிறை!!

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ,தயாரிக்கவோ விற்கவோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலாகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட நிலையில், இதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்:

கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மக்காத பிளாஸ்டிக் தட்டுகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* நீர் குவளைகள்
* தண்ணீர் பாக்கெட்டுகள்
* பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்
* பிளாஸ்டிக் கைப்பை
* பிளாஸ்டிக் கொடி.

மாற்று உபயோகப் பொருட்கள்:

* துணிப்பைகள்
* காகித உறைகள்
* மண் குடுவைகள்
* வாழை இலைகள்
* பாக்குமட்டைகள் தட்டுகள்
* தாமரை இலைகள்

மேற்கொண்ட பொருட்களை பிளாட்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

விலக்கு அளிக்கப்படும் பொருட்கள்:

பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கான உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, நெகிழி பொருட்களை தடை செய்ய, தமிழக அரசு முடிவு செய்து தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமலாக்கியது. அதேநேரம் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களும், வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.