வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி….!!

வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரமடைந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரை தியலும நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வழிகாட்டியாக சென்ற இளைஞர் ஒருவர் அவர்களுடன் செல்பி படம் எடுக்க முயற்சிக்கையில், தியலும நீர்வீழ்ச்சியில் விழுந்து மாயமான நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எல்லப் பகுதியைச் சேர்ந்த கயான் வீரசிங்க என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.