இந்தோனேசியாவை மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். அந்த நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கத்தால் பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்தும்., பலர் உடமைகளை இழந்து தவித்து வந்தனர்.
இந்தநிலையில்., இந்தோனேசியாவின் சுந்தா ஸ்ட்ரேய்ட் கடற்கரை பகுதியில் கடந்த 23 ம் தேதியன்று அங்குள்ள உள்ளூர் நேரப்படி சுமார் 9.27 மணியளவில் யாரும் எதிர்பார்க்காத வேலையில் சுனாமி அலைகளானது தாக்கியது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மக்கள் சுமார் 429 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்., தற்போது சுமார் 128 மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சுனாமிக்கு இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ஜாவா தீவில் உள்ள எரிமலையானது வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வலைகள் காரணமாக சுமார் 65 அடி (20 மீ) உயரத்திற்கு எழும்பிய இராட்சத அலைகளின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள கட்டிடங்கள்., வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் என்று அனைத்தும் சுனாமியின் பேரலையில் சிக்கி சுமார் 11 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும்., மக்களுக்கு தேவையான உணவு., குடிநீர் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்., சுனாமியின் தாக்கத்தில் சிக்கி உயிரிழந்த மக்களின் பிணங்கள் அனைத்தும் குவிந்துவரும் நிலையில்., தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும் மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தை கூட அனுசரிக்க இயலாத முறையில் நடந்த கோர தணடவதால்., மக்கள் இனியும் இது போன்று நடக்க வேண்டாம் என்று கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.