கைது செய்யப்படுகிறார் கவுதம் கம்பீர்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் சில நாட்களுக்கு முன் தனது கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத அவரின் ரசிகர்களுக்கு, தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை டெல்லி நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஆம்., கவுதம் காம்பீருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியின் காஜியாபாத் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 17 வீடுகளை வாங்க ரூ.1.98 கோடி ரூபாயை 17 பேர் முன்பணமாக செலுத்தியுள்ளனர். ஆனால் வீடு கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராகவும், விளம்பர தூதராகவும் கவுதம் கம்பீர் இருந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பேரும் டெல்லி நீதிமன்றத்தில் கவுதம் கம்பீருக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. டெல்லி நீதிமன்றம் கடைசியாக கடந்த புதன்கிழமை கவுதம் கம்பீரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், புதன்கிழமை இந்த வழக்கு விசாரணையின் போது கவுதம் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, கவுதம் கம்பீருக்கு எதிராக பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.