ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்!

காகம் மனிதருக்கு ஒற்றுமை பற்றி சிறந்த பாடத்தை கற்பிக்கும் ஒரு பறவை. அத்தகைய காகம் உணர்த்தும் கெட்ட சகுனத்தின் சில அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.

காகம் உணர்த்தும் கெட்ட சகுனத்தின் அறிகுறிகள் என்ன?
  • காகம் ஒருவரது வாகனம், குடை, காலணி அல்லது உடல் மீது தன் சிறகால் தீண்டினால், அவர்களுக்கு அகால மரணம் நேரிடுமாம்.
  • ஒருவரின் எதிரே காகம் வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால், அது தன லாபம் கிட்டும். அதுவே இடப்பக்கம் இருந்து வடப்பக்கம் சென்றால், அது தன நஷ்டம் உண்டாக்குமாம்.
  • ஒருவர் பயணித்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களின் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால், அந்த பயணத்தை தவிர்க்க வேண்டும்.
  • ஒருவர் வெளியில் செல்லும் போது, ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை பார்த்தால், அது இனிதான செயலை குறிக்கும் சகுனமாம்.
  • காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால், அது லாபம். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது தயிர், எண்ணெய், உணவு போன்றவற்றில் லாபம் கிடைக்குமாம்.
  • காகம் மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது மது, நெல், முத்து, பவளம் கடல் விளை பொருட்கள் அதிகம் கிடைக்கும்.
  • அதுவே வடக்கு திசை நோக்கி கரைந்தால், அது ஆடைகள், வாகனம் ஆகியவற்றில் லாபம் கிடைக்குமாம்.