தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட கம்பனிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.