கோர ரயில் விபத்து…..!!நீண்ட தூரத்திற்கு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட வாகனம்…!!

சற்று முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ் பல்கலைக் கழகத்திற்கு பின்பக்கமாகவுள்ள ரயில்வே கடவையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ரயில் கடவை தண்டவாளத்தில் சிக்குண்ட பெறுமதி வாய்ந்த கார் விபத்தில் சிக்கியது . சம்பவத்தில் தலையிலும், காலிலும் படுகாயமடைந்த கார் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் ரயிலில் மோதுண்ட வேளையில், கார் பாதுகாப்பு தொழில் நுட்பம் உரிய முறையில் தொழிற்பட்டதன் காரணமாக, கார் சாரதி பெரும் ஆபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் ரயிலுடன் மோதிய கார், நீண்ட தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ் தேவி ரயிலில் மோதுண்டே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் இவ்வாறான ரயில்- வாகன விபத்துச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சாரதிகளின் அசண்டையீனமாக செயற்பாடுகளே குறித்த விபத்துச் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .