சற்றுமுன் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்‍கு எதிர்ப்பு தெரிவித்தும், 18 எம்.எல்.ஏ.க்‍களின் தொகுதிகள் தொடர்ந்து புறக்‍கணிக்‍கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக சார்பில் 18 தொகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்று நிலக்கோட்டை தொகுதியில் திரு.தங்கதுரை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 12 பேர், நேற்றுமுன் தினம் மதியம் 12.15 மணி 2.10 மணி வரை 2 மணி நேரம் சசிகலாவை கர்நாடக சிறையில் சந்தித்தனர்.

சசிகலாவை சந்தித்த வந்த பிறகு தினகரன் தலைமையில் 18 தொகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி, நிலக்கோட்டை என தொடர்ந்து போராட்டம் நடந்து முடிந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அரசை கண்டித்து வரும் 14 ஆம் தேதி அமமுக சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுத்துவிட்டது.

இதனையடுத்து தினகரன் தரப்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அரசை கண்டித்து வரும் 14 ஆம் தேதி அமமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை சற்றுமுன் விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ”பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அரசை கண்டித்து வரும் 15ம் தேதி அமமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.