திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடக்க இருக்கும் திருவிழாவை ஒட்டி நாளை மறு நாள் செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட 3 வட்டங்களுக்கு விடுமுறை என காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த விழாவை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.