சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகருக்கு தர்மஅடி!

திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த அ.தி.மு.க பிரமுகர் செக்கடி சலீம் என்பவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் அரசு உதவிப்பெரும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் செயலாளராகவும்,49A வார்டு அ.தி.மு.க செயலாளராகவும் இருப்பவர் செக்கடி சலீம். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து அவர் பெற்றோரும் இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்களும் சலீமை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த தில்லை நகர் காவல் துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.