உடலுறவின் போது தான் இளம்பெண் இறந்தாரா..? 12 பேர் சேர்ந்து செய்த அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்களம் வடக்கு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்த நபர்கறம்பகுடி ஒன்றியம் அதிரான்விடுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞர்.

ஆதனக்கோட்டையில் தனது சித்திவீட்டில் இருந்து கார் ஓட்டி வரும் நடராஜனுக்கும். ஆலங்குடி மெடிக்கல்ஷாப்பில் வேலை செய்த கஸ்தூரிக் கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது

.கடந்த 28ம் தேதி ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை காட்டி தனது காரில் அந்தபெண்ணை யாருக்கும் தெரியாமல் நடராஜன் அழைத்துச் சென்றுள்ளான்.

முந்திரிக்காட்டு பகுதியில் கஸ்தூரியை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு மல்லிப்பட்டினம் ஆற்றில் வீசி விட்டு சென்னைக்கு தப்பி ஓடி விட்டான்.

பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நடராஜனை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்தனர்.

இதில், மணமேல்குடியில் லாட்ஜில் இருந்தோம். வலிப்பு வந்து கஸ்தூரி இறந்து விட்டார். இதனால் பயந்து சாக்கில் அவரது உடலை கட்டி வீசினேன் என குற்றவாளி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் 12 பேர் நடராஜனோடு சேர்ந்து வல்லுறவு செய்து கஸ்தூரி கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

பிரேத பரிசோதனை இரண்டு மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. காணொளி பதிவும் செய்யப்பட்டு நடந்துள்ளது. க

ஸ்தூரிபலரால் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. எனவே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.

மேலும் இது தொடர்பு உள்ள 12 பேரைஉடனே கைது செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிகழும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.