பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5G மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ உம்மன் 5G மொபைல்கள் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளிட்டு இருக்கிறார்.

தற்போது சுமார் 40 கோடி இந்திய வாடிக்கையாளர்கள் சாதாரண போன்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த இயலாது என்று கூறினர்.

அமெரிக்கா மற்றும் சீனாவில் இன்டர்நெட் வசதியை சிறப்பாக அளித்து முன்னேறிய நிறுவனங்களை பற்றி கூறியுள்ளார், இந்தியாவில் 5G தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் 2019-20க்குள் நிறைவடையும். 2021ஆம் ஆண்டு முதல் சாமானியர்களும் வாங்கக்கூடிய குறைவான விலையில் 5G மொபைல்கள் விற்பனைக்கு வரும் என்று கூறியுள்ளார்.