மாட்டு வண்டியில் கலக்கும் மூதாட்டி! வைரலாகும் தகவல்..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு செல்ல மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 80 வயதுடைய மூதாட்டியொருவரே இவ்வாறு தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு நடந்து செல்ல முடியாத காரணத்தினாலே கடந்த பதினைந்து வருடங்களாகவே மாட்டி வண்டியை பயன்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.