சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க மாட்டு வண்டியில் ஊர்வலம்!

சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு.

தற்போது திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு அனைத்தும் கார்களிலேயே நடைபெற்று வருகிறது. இதற்கு மாறாக கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில் நாளை நடைபெற உள்ள திருமணதிற்காக இன்று இரவு மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்து ரசித்தனர் மணமக்கள் இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். சென்டை மேளம் முழங்க மணமக்கள் அழைப்பு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்கவும் வேண்டி பழங்கால முறையில் மாட்டு வண்டியில் இந்த மணமக்கள் அழைப்புக்கு ஏற்பாடு செய்ததாக மணமகன் அருண் நேரு தெரிவித்தார்.