காடுகளுக்குள் நிர்வாணமாகத் திரியும் மனிதர்கள்…!

வீதி­யோ­ரத்­தில் ஆடைகள் இல்­லாது நின்ற இரு­வர், வீதி­யில் பெண் ஒரு­வர் வரு­வ­தைக் கண்­ட­தும் தலை­ தெ­றிக்­கத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் வவு­னியா வடக்கு, புளி­யங்­கும் முல்­லைத்­தீவு பிர­தான வீதி­யில் சன்­னா­சிப்­ப­ரந்­த­னுக்கு முன்­பா­க­வுள்ள காட்­டுப் பகு­தி­யில் இடம்பெற்றுள்ளது.அந்த வீதி வழி­யா­கப் பெண் ஒரு­வர் சிறு­வன் ஒரு­வ­ரு­டன் புளி­யங்­கு­ளம் நோக்­கிச் சென்­றுள்­ளார்.

ஆள்­கள் நட­மாட்­டம் உள்ள பகு­தி­யில் இரு இளை­ஞர்­கள் ஆடை­கள் அற்ற நிலை­யில் முழு நிர்வாணமாக வீதி­யில் நின்­றுள்­ள­னர்.அதைக் கண்ட பெண் சற்­றுத் தூரத்­தில் மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­யுள்­ளார்.

அந்­தச் சம­யம் வீதி­யால் வேறு சில­ரும் வந்­துள்­ள­னர். அதைக் கண்ட இளை­ஞர்­கள் காட்­டுப் பகு­திக்­குள் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.காட்­டுப் பகு­தி­யில் தேடி­ய­போ­தும் அவர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு 18 அல்­லது 17 வய­து­கள் இருக்­க­லாம் எனவும் தெரி­விக்­கப்­படுகின்றது .

அவர்­கள் சென்ற பாதை­யால் சென்று பார்த்­த­போது, பெண் ஒரு­வ­ரின் உள்­ளா­டை­க­ளும் காணப்­பட்­டன என்வும் தெரி­விக்­கப்­படுகின்றது .