கோலாகலமாக துவங்கிய பலூன் திருவிழா.! ஒருமாதம் நடைபெறும்.!
மெக்சிகோவில் வருடந்தோறும் நடந்து பலூன் திருவிழாக்கள் உலக அளவில் மிகவும் பிரசித்தியான பறக்கும் கியாஸ் பலூன் போட்டியாகும். பல நாடுகளில் இருந்து இந்த போட்டிகளை காண பார்வையாளர்கள் மெக்சிகோவுக்கு வருகை தருகின்றனர்.
அவ்வகையில், தொடர்ந்து 47-வது வருடமாக இந்த பலூன் திருவிழா இன்று கோலாகலமாக துவங்கி இருக்கிறது. கண்ணைக்கவரும் வகையில் சுமார் 500 பலூன்கள் வானத்தில் வட்டமடித்து பறக்கும். இந்த பலூன் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சில முதியவர்களும் போட்டியாளர்களாக பங்கேற்று இருக்கிறார்கள்.
ஒருமாதம் நடத்தப்படும் இந்த கோலாகல பலூன் திருவிழாவின் முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும்.






