அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா, உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்று தெரிவித்துள்ளார்.
இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரச்சாரத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா தொடங்கியுள்ளார்.
தற்போது பரபரப்பாக பேசப்படும் #Metoo இயக்கம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள மெலானிய டிரம்ப், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
‘ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால், இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளேன்.
என்னைப் பற்றி மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டும். அதனால்தான் எனது சிறந்த முன் முயற்சி சமூக ஊடக மற்றும் ஒன்லைன் நடத்தையை மையமாகக் கொண்டது.
இது போன்ற கிண்டல்களை எதிர்கொள்ளும் வகையில், குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில்,
‘சமூக உணர்ச்சிப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்து வரும் போது இது போன்ற சிக்கல்களை சமாளிப்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.