ஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலம் மிகவும் முக்கியம், மற்றவை எல்லாம் அப்புறம் தான். அதனால் உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். உடல் நலத்தை காக்க சில யோசனைகள்.
துளசி இலைகளை தூங்கும் முன் இரவு நேரத்தில் செப்பு பாத்திரத்தில் போட்டு நீரில் ஊற வைத்து காலையில் பருகி வர புத்துணர்ச்சி உண்டாகும்.
அருகம்புல்சாறு ஒரு டம்ளர் தினந்தோறும் அருந்த நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்யப்பட்ட வெல்லம், நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி 5 கிராம் சாப்பிட்டு வர உடல் அலுப்புத் தீரும்.
ரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்க, உடல் குளிர்ச்சி பெறும்.
மாதுளம் பழச்சாறு, தேன் ஆகியவை கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
பப்பாளி பழம் தினமும் சாப்பிட உடல் பலம் கூடும்.