பெட்ரோல்-டீசல் விலை? மோடியை சந்தித்த பின், பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.!

கடந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கலந்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை பரிலித்து பிரதமர் அலுவலகம், பிரதமரை சந்திப்பதற்கு இன்று காலை அனுமதி அளித்தது.

இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். இன்று காலை பிரதமரை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது,

”தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், ”எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திடவும், ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கவும், கன்னியாகுமரியில் கப்பற் படை தளம் அமைக்கவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் வைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர். ”நிதி ஆதாரத்தை பெருக்கி பெட்ரோல் – டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.