சவுதி அரேபிய தூதரகத்தில் பிரபல பத்திரிகையாளர் கொலை!

சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன

சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால்கசோகி என்ற பத்திரிகையாளரே தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என  துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டது குறிப்பிட்ட பத்திரிகையாளர் தூதரகத்திற்கு செல்லவுள்ளார் என்பதை அறிந்த சவுதிஅரேபிய அதிகாரிகள் துருக்கிவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர் நான்குநாட்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ள நிலையிலேயே துருக்கி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலதிக ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

துருக்கி அதிகாரிகள் வீடியோக்களை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

சவுதி அரேபியாவிலிருந்து வந்த 15 பேர் கொண்ட குழுவினர் பத்திரிகையாளரை தூதுரகத்திற்குள் பத்திரிகையாளரை சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் உடலை வாகனமொன்றில்  ஏற்றி வெளியே கொண்டு சென்ற பின்னர் மீண்டும் தமது நாட்டிற்கு சென்றுவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.