மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் 1917 ஆம் வருடம், ஜனவரி 17-ல் பிறந்தார்.
இவர் பிறந்து தற்போது 100 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையடுத்து அதிமுக அரசு கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல கோடி செலவு செய்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடியது.
நேற்று (30.9.2018) சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்உட்பட பலரும் கலந்து கொடு உரையாற்றினர். பாதுகாப்பு பணியின் அதிக அளவில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்த விழாவிற்கு கலந்துகொள்ள வந்த அதிமுக தொண்டர்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மது விற்பனை நடந்தது.
விழாவிற்கு வந்தவர்களிடம் பேச்சு கொடுத்த பொழுது மெல்ல மெல்ல அவர்களே உண்மையை சொல்ல ஆரம்பித்தனர்.
அதில், அதிமுக வார்டு கவுன்சிலர் வரைக்கும் ஆட்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவு பறந்திருக்கிறது. ஒரு பேருந்துக்கு அம்பதாயிரம் வரை செலவு செய்து, வருவது போவது அழைத்து வந்தவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் செய்வது போன்றவை ஏற்படுத்தி கொடுக்கப் பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளனர்.
சில இடங்களில் அதிமுக நிர்வாகிகள் செலவை தாக்குப்பிடிக்க முடியாமல், ஓட்டை உடைசலான பள்ளி பேருந்துகளில் மக்களை அடைத்துக்கொண்டு மாநாட்டிற்கு வருவதை காண முடிந்தது.
மக்கள் வரும் ஆம்னி பேருந்துகளும் இடையில் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அங்கு செல்வதை போல காண்பிக்கப்பட்டது.
அதே போல இரவு நேரத்தில் மது அருந்த சாலைஎங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆளும் கட்சிக்’காரர்களாக இருந்தாலும் அதனை அனுமதித்தால், அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரட்டியடித்த வண்ணம் இருந்தனர்