மாதுளம்பழம் பணமாக மாறிய காட்சி… அதிசயம்!

மேஜிக் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அவதானிக்கும் நிகழ்வாகும். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றினை புதிதாக கொண்டு வரும் வித்தை இதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையிலேயே இம்மாதிரியான மேஜிக் எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்த வண்ணமே இருக்கும். இங்கும் உங்கள் கண்களால் நம்ப மறுக்கும் மேஜிக் காட்சியினையே காணப்போகிறோம்.

நபர் ஒருவர் டம்ளர் ஒன்றில் இரண்டு மாதுளம்பழத்தினை போட்டு வைத்து அதனை பணமாக மாற்றி பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் இக்காட்சியில் காணொளியினை எடிட் செய்துள்ளது மிகவும் நன்றாகவே தெரிந்துள்ளது.