குளிப்பதற்குக் கூட திசையா?… இதெல்லாம் ஏமாற்று வேலை, மூடப்பழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லவில்லை.
அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் பல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த வகையில், குளிப்பதற்குக்கூட எப்போது குளிக்க வேண்டும். எந்த திசையில் நின்று குறிக்க வேண்டும் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
குளிக்கும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்.
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். இவை இரண்டும் குளிப்பதற்கான உத்தம திசைகளாகும்.
கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல்வலி வரும்.
தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும்.
இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
டவலை குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். ஆனால் நாம் அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிக்கிறோம்.
உலர்ந்த துணியானது உள்சூட்டை வேகமாக பரவச்செய்து பலவித உள் நோய்களை உருவாக்கும்.
பிறருடன் வாய்திறந்து பேசாமல் செய்கின்ற மூன்று வேலைகளில் ஒன்று, குளிக்கும் நேரம்.
ஆற்றில் குளிப்பவர்கள் ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.






