10,000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இராட்சதப் பறவைகளின் படுகொலை: பின்னணி?

மடகஸ்காரில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் யானைப்பறவைகள் வாழ்ந்திருந்தன.

இவை அக்கால மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

பறவைகளின் மீதிகளை ஆராய்ந்ததில் அவை 10,000 ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது.

இதுவரையிலும் முதல் குடியேறிகள் 2,500 தொடக்கம் 4,000 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் குடியேறியிருக்கலாம் என நம்பப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய ஆதாரமானது மனிதர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்பதையே காட்டுகின்றன.

இந்த யானைப்பறவைகள் 3 மீட்டர் வரையில் உயரமானவை. இவற்றின் முட்டைகள் டைனோசரின் முட்டையிலும் பெரிது.

இவற்றின் அழிவுக்குக் காரணமான மனிதர்கள் யார், எங்கிருந்து வந்தனர், எங்கே போயிருந்தனர் என்பது இதுவரையிலும் மர்மமாகவே உள்ளது.