மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்??

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் தனது மனைவி தீபா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மணிகண்டன் தனது மனைவி தீபாவுடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகன்டன் தன்னுடன் வேலை செய்யும் கீதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்ட மணிகன்டன், இரண்டு மனைவிளுடன் ஒரே வீட்டில் தன் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில், தீபா கோபத்துடன் தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி தீபாவை சமாதானப்படுத்தி திருப்பூருக்கு அழைத்துச்செல்ல தேவதானப்பட்டிக்கு வந்த மணிகண்டன்,  தீபாவை திருப்பூருக்கு அழைத்துள்ளார். இதற்கு தீபா மறுப்பு தெரிவித்ததால்  இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்த மணிகன்டன், நடந்த சம்பவம் அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து தீபாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.