- மட்டன் – அரை கிலோ
- கேரட் – 2
- உருளைக்கிழங்கு – 2
- பெரிய வெங்காயம் – 1
- மைதா – 2 மேசைக்கரண்டி
- பச்சைபட்டாணி – அரை கப்
- கிராம்பு – 5
- ஏலக்காய் – 3
- பட்டை – சிறுதுண்டு
- மிளகு – 5
- பால் – அரை கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.
- வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.