மணமகன் அதிர்ச்சி.!! தாலி கட்டிய அன்றே குழந்தை பிறந்த வினோதம்.!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது இருந்தது. இவர்கள் இருவருக்கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் இவர்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை வீட்டினருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் திடுக்கிட்ட உறவினர்கள், புதுப்பெண்ணை கொளத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மணப்பெண்ணை பரிசோதனை செய்துவிட்டு அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறக்கும், என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியை பிரசவ வார்டில் மருத்துவர்கள் சேர்த்தனர். அங்கு அன்று இரவு 9.30 மணியளவில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த புதுமாப்பிள்ளை வீட்டினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருமணமான அன்றே புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொளத்தூர் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.