டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 28 ம் தேதி காலை 10.35 மணிக்கு டெல்லி, டிபன்ஸ் காலனியில் வசிக்கும் மாளவிகா திரிபாதி என்ற பெண் வந்தார். உள்நாட்டு முனையத்திற்கு சென்ற அவர், தர்மசலா செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கான டிக்கெட் வைத்து இருந்தார்.
சந்தேகத்திற்கு உரிய வகையில் காட்சியளித்த அவரது லக்கேஜ்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது சந்தேகப்படும்படி ஒரு பொருள் இருப்பது தெரிந்தது.பையை திறந்து பார்த்த போது, மொபைல் போனுக்கு பயன்படுத்திட கூடிய பவர் பேங்க் இருந்தது. அதை கைப்பையில் வைத்துக் கொள்ளும்படி, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் கேட்டுக் கொண்டர்.
ஆனால், அந்த பெண் கோபம் அடைந்து அந்த பவர் பேங்க்கை, சுவரை நோக்கி வீசினார். சுவரில் பட்டு கீழே விழுந்த பவர் பேங்க் வெடித்து சிதறியது. உடனே சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் கையெறி குண்டு வெடித்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
எனினும், வெடித்தது பவர் பேங்க் தான் என்பது சோதனையில் முடிவு செய்யப்பட்டது. பதட்டத்தை ஏற்படுத்திய அந்த பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விமான நிலையத்திற்குள்ளாக பவர் பேங்க் வெடித்த காரணத்தினால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.






