பரபரப்பை ஏற்படுத்திய கர்ப்பிணிப் பெண்ணின் படுகொலை!!

கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் படுகொலை குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான இவர், சில நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த பெண் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பாதுகாப்பு கடமைகளில் பணியாற்றியுள்ளார். தனது பணி நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, சிலரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவ்வாறு கடத்தியவர்கள் அவரை தாக்கி மற்றும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு, முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.குறித்த பெண் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத்தொலைபேசி மலையாளபுரம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொலைபேசியை பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்னொருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பிள்ளை உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.