ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் பெண் வினேஷ் போகாட்

ஆசிய போட்டிகளில் ‘டங்கல் நாயகியான’ இந்தியாவின் வினேஷ் போகாட் பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.

பெண்கள் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகாத், ஜப்பானின் யூகி ஐரீயை எதிர்கொண்டார். இதில் 6-2 என்ற கணக்கில் வினேஷ் போகாட் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாடுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை வினேஷ் போகாட் பெற்றுள்ளார்.

டங்கல் திரைப்படமானது போகாட் குடும்பத்தை மையமாகவைத்தே எடுக்கப்பட்டது. அதன்படி டங்கல் நாயகியாக கருதப்படும் 23 வயதாகும் வினேஷ் போகாட் தற்போது தங்கம் வென்று சாதித்துள்ளார்.

இந்­தோ­னே­ஷி­யாவில் நடை­பெற்­று­வரும் 18ஆவது ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் மொத்தம் 45 நாடுகள் பங்­கேற்று போட்­டியிட்டு வரு­கின்­றன.

இத் தொடரில் இலங்கை அணி சார்பில் மொத்­த­மாக 175 வீர,வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டுள்­ளனர்.  ஆனாலும் தொடரில் இலங்கை அணி இன்னும் ஒரு பதக்­கத்­தை­யேனும் வெல்­ல­வில்லை.

அதே­வேளை தொடரின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை நடை­பெற்ற நீச்சல் போட்­டியில் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஆண்­க­ளுக்­கான 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்­சலில் கலந்­து­கொண்ட இலங்கை வீரர்­க­ளான மெத்தியூ அபே­சிங்க மற்றும் கைல் அபே­சிங்க சகோ­த­ரர்கள் முதல் சுற்­றுடன் வெளி­யேறி ஏமாற்­ற­ம­ளித்­தனர்.

நேற்றுக் காலை நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் தகு­திகாண் சுற்றில் இலங்­கையின் நட்­சத்­திர நீச்சல் வீர­ரான மெத்தியூ அபே­சிங்க மற்றும் கைல் அபே­சிங்க ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இதன் ஆறா­வது தகுதிச் சுற்றில் கலந்­து­கொண்ட மெத்தியூ அபே­சிங்க, 22.88 வினாடி­களில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்­தையே பிடித்தார்.

இதே­நேரம், 50 மீற்றர் சாதா­ரண நீச்­சலின் ஏழா­வது தகு­திகாண் சுற்றில் இலங்கை சார்­பாக கலந்­து­கொண்ட கைல் அபே­சிங்க, போட்­டியை 23.36 வினாடி­களில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

இதன்­படி, 51 வீரர்கள் கலந்­து­கொண்ட தகு­திகாண் போட்­டியில் ஒட்­டு­மொத்த நிலையில் இவ்­விரு வீரர்­களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்­களைப் பெற்று அடுத்த சுற்­றுக்குத் தெரி­வாகும் வாய்ப்பைத் தவ­ற­விட்­டனர்.