கரூர் மாவட்டத்தில் ஓரின சேர்க்கையில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள விசுவநாதபுரி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சிரஞ்சீவி (வயது 13). இவன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற சிரஞ்சீவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் வாய்க்கால் அருகே உள்ள வனப்பகுதியில் மாணவன் சிரஞ்சீவி பிணமாக கிடந்தான். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் க.பரமத்தி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் விசுவநாதபுரி சலைவைக்கல் தெருவைச் சேர்ந்த மினி பஸ் கண்டக்டர் பிரதீப் என்பவர் (19) அன்று மாலை சிரஞ்சீவியை அழைத்து சென்றது தெரியவந்தது.
எனக்கு ஓரினசேர்க்கையில் ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிரஞ்சீவியை நைசாக பேசி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். பின்னர் அவனை மிரட்டி ஓரினசேர்க்கைக்கு இணங்க வைத்தேன். அப்போது அவன் கதறி அழுதான். மேலும் அவனது அம்மா, அப்பாவிடம் சொல்லி விடுவேன் எனக் கத்தினான்.
இதனால் பயந்து போன நான் குடிபோதையில் எனது சட்டையை கழற்றி அவனது வாய், மூக்கை அமுக்கினேன். இதில் அவன் இறந்துவிட்டான்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.