யாழ்ப்பாண கேக் விற்பனை நிலையத்தில் இப்படி ஒரு பயங்கரம்

கேக் விற்பனை நிலையம் நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு நடத்திய சோதனையில் 3 கிலோ மாவா பாக்குப் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் குறித்த நிலையத்தில் இருந்து மாவா பாக்கினை மீட்டுள்ளனர்.

விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ மாவா போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் கடையில் விற்பனைக்கு நின்ற இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.