உங்கள் காதலி தேவதையாக மாற இந்த இலை ஒன்றே போதும்

தேவதை போன்று நீங்கள் மாற வேண்டுமா! இந்த ஒரு இலையை கொடுக்கவும்? எல்லோருக்கும் அவரவர் காதலியின் மீது அதீத அன்பு இருக்கத்தான் செய்யும். காதலன், தன் காதலி என்றுமே ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

இது மனிதனின் இயலப்பான விடயமாகவே உள்ளது. சிலர் தன் காதலியின் அழகிற்கு அழகு சேர்க்க விரும்புவார்கள்.

அப்படி தேவதை போன்று அவர்களை அழகு பெற செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான இலை இருக்கிறது.

பல வகையான அழகு குறிப்புகளை தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கொய்யா இலைதான் அது.

முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும்.

இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி “என்றும் பதினாறு” போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முகப்பருக்களே. இது சில வகையான பாக்டீரியாக்களால் முகத்தில் வருகிறது.

கொய்யா இலையில் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மை உள்ளதால், இதனை அரைத்து முகப்பருக்களை முகத்திற்கு பயன்படுத்தினால் விரைவிலேயே முக பருக்களை காணாமல் போக செய்துவிடும்

பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும்.

இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும்.

பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும் அதிக மாசுக்கள் ஏற்படுவதால் தோலில் பல வகையான நோய் தொற்றுகளும் வருகின்றது. இதற்கு தீர்வு தருகிறது கொய்யா இலை.

இதில் அதிகம் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே இருப்பதால் தோலின் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தோல் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.