புதிய நிலக்கடலையால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்

இலங்கையில் ஸ்ரீலங்கா ஜம்போ என்ற பெயரில் நிலக்கடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரபல்யப்படுத்துவதன் மூலம் நிலக்கடலை இறக்குமதிக்காக செலவிடப்படும் 700 கோடி ரூபாவை சேமிக்க முடியும் என்று விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஜம்போ நிலக்கடலைக்கு மாற்றீடாகவே இந்த ஸ்ரீலங்கா ஜம்போ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த நிலக்கடலை சிறந்த சுவையுடையது என்றும் கூறப்பட்டுள்ளது.