இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து?

முத­லா­வது சீனா­வுக்கு அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் துறை­மு­கத்­தினுள் செயற்கை தீவொன்று சீனா­வுக்கு வழங்­கப்­பட்ட உரி­மையை பார்க்­கையில், ஏற்­க­னவே சீனா­வுக்கு துறை­மு­கத்­திலும் அதைச்­சார்ந்த பகு­தி­க­ளிலும் வழங்­கப்­பட்­டுள்ள 99 ஆண்டு ஆளுமை உரி­மையின் விளைவே இது­வாகும். காலப்­போக்கில் அங்கே இலங்கை அரசின் ஆளுமை பெய­ர­ளவில் இருந்­தாலும் மெது­வாக சீனாவின் ஆதிக்கம் ஓங்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

இத­னையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நீர்­மூழ்கிக் கப்­பல்­களைப் பற்றி குறிப்­பிட்­டி­ருப்­பது இந்­தியப் பெருங்­க­டலில் சீன ஊடு­ரு­வ­லுக்கு அம்­பாந்­தோட்டை துறை­முகம் எவ்­வாறு உத­வக்­கூடும் என்ற அமெ­ரிக்­காவின் கவ­லைக்­கான பதி­லாகும். ஆனால் இலங்கை கடற்­ப­டை­யா­னது கட­லோர பாது­காப்­புக்கே தகுதி வாய்ந்­த­தாகும். ஆகவே அந்தக் கடற்­ப­டையில் எந்த அளவில் நீர்­மூழ்­கி­களின் கண்­கா­ணிப்பை செய­லாக்க முடியும் என்­பது கேள்விக் குறி­யா­கின்­றது.

இலங்­கையில் ஒரு சர்­வா­தி­கார ஆட்சி உரு­வா­­வதை இந்­தியா ஒரு போதும் விரும்­பாது. அதே­வேளை விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான போரின் போது பெரும் எண்­ணிக்­கை­யான இரா­ணுவம் பயன்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் கோத்­த­ாபய தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்றால் , இலங்­கையில் சர்­வா­தி­கார அல்­லது இரா­ணுவ ஆட்­சியை முன்­னெ­டுக்கும் என்று எதிர்­பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை என இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்­வு­நிலை புல­னாய்வு நிபு­ணரும்

தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாத மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நீண்ட அனு­பவம் கொண்­ட­வரும் ஆய்­வா­ள­ரு­மான கேர்ணல் ஹரி­கரன் தெரி­வித்­துள்ளார்..

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் ஏற்­படும் எதிர்­வி­ளை­வுகள், இந்­தி­யாவின் நிலைப்­பா­டுகள், இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நகர்­வுகள் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் வார­வெ­ளி­யீட்­டுக்கு பிரத்­தி­யே­க­மாக கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இலங்­கையில் மாற்றம் அடைந்து வரும் அர­சியல் கள நிலை­மை­களின் பின்­ன­ணியில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை மத்­தள விமான நிலை­யத்­தினை இந்­தி­யா­வுக்கு வழங்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன . மேலும் இங்கு நெடுஞ்­சாலை ஒன்றை அமைக்க ஜப்­பா­னுடன் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மூன்று நாடுகள் பிர­வே­சிப்­பதால் இரா­ஜ­தந்­திர ரீதியில் இந்­தியா இதனை எத்­த­கைய கண்­ணோட்­டத்­துடன் பார்க்­கின்­றது என்று கேட்ட போது , இதில் மூன்று நிகழ்­வு­களின் தாக்­கங்கள் தென்­ப­டு­கின்­றன. ஆகவே அவற்றை முதலில் தனித்­த­னி­யாக நோக்­கிய பிற­குதான் அவற்றின் ஒன்று சேர்ந்த தாக்­கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

முத­லா­வது சீனா­வுக்கு அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் துறை­மு­கத்­தினுள் செயற்கை தீவொன்று சீனா­வுக்கு வழங்­கப்­பட்ட உரி­மையை பார்க்­கையில், ஏற்­க­னவே சீனா­வுக்கு துறை­மு­கத்­திலும் அதைச்­சார்ந்த பகு­தி­க­ளிலும் வழங்­கப்­பட்­டுள்ள 99 ஆண்டு ஆளுமை உரி­மையின் விளைவே இது­வாகும். காலப்­போக்கில் அங்கே இலங்கை அரசின் ஆளுமை பெய­ர­ளவில் இருந்­தாலும் மெது­வாக சீனாவின் ஆதிக்கம் ஓங்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

இத­னையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நீர்­மூழ்கிக் கப்­பல்­களைப் பற்றி குறிப்­பிட்­டி­ருப்­பது இந்­தியப் பெருங்­க­டலில் சீன ஊடு­ரு­வ­லுக்கு அம்­பாந்­தோட்டை துறை­முகம் எவ்­வாறு உத­வக்­கூடும் என்ற அமெ­ரிக்­காவின் கவ­லைக்­கான பதி­லாகும். ஆனால் இலங்கை கடற்­ப­டை­யா­னது கட­லோர பாது­காப்­புக்கே தகுதி வாய்ந்­த­தாகும். ஆகவே அந்தக் கடற்­ப­டையில் எந்த அளவில் நீர்­மூழ்­கி­களின் கண்­கா­ணிப்பை செய­லாக்க முடியும் என்­பது கேள்விக் குறி­யா­கின்­றது.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­திய நிர்­வா­கத்­திற்கு ஒப்­ப­டைப்­பது அதை இலா­ப­க­ர­மாக நடத்­து­வ­தற்­கான வியா­பார விரி­வாக்கம் என்று கூறலாம். இருந்­தாலும் இலங்கை அர­சுக்கு சீனா­வுடன் வளர்ந்து வரும் நெருங்­கிய உறவின் கார­ண­மாக தனது இந்­திய உறவில் ஏற்­படும் தாக்­கத்தை ஓர­ளவு சம­நி­லைப்­ப­டுத்த உதவும் முயற்சி என்று கரு­து­கிறேன்.

இந்­தியா மத்­தள விமான நிலை­யத்தின் ஊடாக பிர­வே­சிப்­ப­தா­னது அம்­பாந்­தோட்­டையில் கால்­ப­திக்க உதவும் என்று சீனா கருதும். ஆனால் அது இந்­தியா எவ்­வாறு மத்­தள விமான நிலை­யத்தை உப­யோ­கிக்கும் என்­பதைப் பொறுத்­துள்­ளது.

அது­போன்று ஐப்­பா­னு­ட­னான நெடுஞ்­சாலை கட்­டு­மான ஒப்­பந்­த­மா­னது இலங்கை முழு­மை­யாக சீனாவின் பொரு­ளா­தாரப் பிடிப்பில் இல்லை என்று உல­குக்கு எடுத்துக் காட்டும் ஒரு முயற்சி என்றே தோன்­று­கி­றது. ஆக இந்த நிகழ்­வு­களை ஒட்டு மொத்­த­மாகப் பார்த்தால் இலங்­கையில் வலுத்­து­வரும் சீனப் பிர­வே­சத்தின் விளை­வாக இலங்­கையின் நட்பு நாடு­க­ளான இந்­தியா, ஜப்பான், அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஏனைய மேற்கு நாடு­க­ளி­டையே இந்­தியப் பெருங்­க­டலின் பாது­காப்பைப் பற்­றிய கரி­ச­னத்தின் அதி­க­ரிப்பைக் காட்­டு­கின்­றது.

அவற்றை அந்­நா­டு­களின் இரா­ஜ­தந்­திர வெளி­யீடு என்று கரு­தலாம் ஆகவே இலங்­கையில் சீனாவின் ஆளுமை தொடர்ந்து வளர்ந்து வரும் சூழ்­நி­லையில், இலங்கை அரசு தனது சீன உறவை மற்ற நேச நாடு­க­ளுடன் சம­நி­லைப்­ப­டுத்தக் கடி­ன­மாக செயல்­படும் என எதிர்­பார்க்­கலாம் என்றார்.

இதே­வேளை, கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினால் இரா­ணுவ அல்­லது சர்­வா­தி­கார ஆட்சி ஏற்­படும் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றமை தொடர்பில் ,இந்­தியா எத்­த­கைய நிலைப்­பாட்­டினை எடுக்கும் என்­பது குறித்து கருத்து வெளி­யிட்ட அவர் ,,

இந்த விட­யத்­திற்கு நான் நடு­நி­லை­யுடன் பத­ல­ளிக்க முனை­கிறேன். ஏனெனில், இலங்­கையை ஜன­நா­யகப் பாதை­யி­லி­ருந்து மாற்றி எளி­தாக இரா­ணுவ ஆட்­சி­யாக மாற்ற முடியும் என்ற கூற்றில் எனக்கு நம்­பிக்கை இல்லை. கோத்­தா­பய கடந்த காலத்தில் அவ்­வாறு செய்­ய­வில்லை. அதே­நே­ரத்தில் விடு­தலைப் புலி­களை எதிர்த்து நடந்த நாலா­வது ஈழப்­போரின் போது, அவ­ச­ர­காலச் சூழல் அறி­விக்­கப்­பட்ட தரு­ணத்தில் இரா­ணு­வத்தின் கை ஓங்­கி­யி­ருந்­ததும், பயங்­க­ர­வாதச் சட்­டத்தை ஆட்­சி­யினர் துஷ்­பி­ர­யோகம் செய்து மனித உரி­மையை மதிக்­காமல் செயல்­பட்­டதும் உண்­மையே.

அந்தக் காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்­களின் விளைவே மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஆட்சி மீண்டும் வரா­த­படி பெரும்­பான்மை மக்கள் தேர்­தலில் அவ­ருக்கு எதி­ராக வாக்­கு­ரி­மையை பிர­யோ­கித்­தார்கள். மைத்­தி­ரி­பால அரசு பத­விக்கு வந்து மூன்­றாண்­டு­க­ளுக்கு மேல் ஆனாலும் குற்றம் செய்­த­வர்­களை தண்­டிக்­காமல் செயல்­ப­டு­வது அதன் செயல்­பாட்டின் குறையே ஆகும்.

அவ்­வாறு அரசு தொடர்ந்து மெத்­தனம் காட்­டு­வது ஏன்? போர்க்­குற்­றங்­க­ளுக்­காக இரா­ணுவத் தலை­வர்கள் மீது வழக்குப் போட்டால் அதன் எதிர்­மறை விளை­வுகள் இரா­ணு­வத்­தி­னுள்­ளேயும், பொது மக்­க­ளி­டை­யேயும் தோன்­றக்­கூடும் என்ற அச்சம் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். மைத்­தி­ரி-­ரணில் அர­சுக்கு அதன் அர­சியல் ரீதி­யான பக்க விளை­வு­களைப் பற்­றிய அச்­சமும் இருக்­கலாம்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ அல்­லது எந்த மாற்றுத் தலை­வரோ அடுத்த பொதுத்­தேர்­தலில் ஜன­நா­யக முறையில் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அர­ச­மைத்தால் அதை இந்­தியா கட்­டாயம் வர­வேற்கும். மீண்டும் ராஜ­ப­க்ஷ­கு­டும்­பத்­தினர் பத­விக்கு வந்தால், அவர்கள் செயல்­பாடும் இந்­தியா- இலங்கை உறவின் அர­சியல் முக்­கி­யத்­து­வத்தை மனதில் கொண்டே செயல்­ப­டு­வார்கள் என்று நினைக்­கிறேன். அவ்­வா­றுதான் கடந்­த­கா­லத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ஓர­ளவு செயற்­பட முயற்­சிப்­ப­தாக சொல்லிக் கொண்டார்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ தலைமை தேர்­தலில் பெரும்­பான்மை இடங்­களில் வெற்றி பெற்றால் சர்­வா­தி­கார அரசை அமைக்க வேண்­டிய கட்­டாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. கடந்த காலத்தில் நடந்த விடுதலைப் புலிகளுடனான போர், அவர் இராணுவத்தைப் பெருமளவில் உபயோகிக்க முக்கிய காரணியாக இருந்தது. தற்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. அது உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் சர்வாதிகார ஆட்சி அமைத்தால், அதை மக்கள் மௌனம் காத்து அனுமதிப்பார்களா? கட்டாயம் எதிர்ப்பார்கள்.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி அமைக்கப்பட்டால் இந்தியா கட்டாயம் அதை வரவேற்காது. மாலைத்தீவில் நடந்து வரும் எதேச்சாதிகார விடயத்தில் இந்தியா எடுத்துள்ள எதிர்நிலையே இதற்கு ஒரு உதாரணமாகும். இந்தியா மாலைத்தீவில் எடுத்த இந்த நிலைப்பாடு இலங்கையில் சர்வாதிகார அரசு அமைக்க ஒரு பெரும் தடையாய் இருக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டினார்.