மயங்கி வீழ்ந்­து உயிரிழக்கும் யாழ்ப்பாணத்து மக்கள்! மர்மம் என்ன??

யாழ்ப்­பா­ணத்­தில் வெவ் வேறு சம்­ப­வங்­க­ளில் திடீ­ரென மயங்­கிய மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். கொக்­கு­வில், பலாலி, சங்­கா­னை­யைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கொக்­கு­வில்

கொக்­கு­வில் கிழக்­கைச் சேர்ந்த கார்த்­தி­கேசு கதிர்­கா­ம­லிங்­கம் (வயது-60) என்ற ஆறு பிள்­ளை­க­ளின் தந்தை, வீட்­டில் பாக்கு இடித்­துக் கொண்­டி­ருந்­துள்­ளார். திடீ­ரென அவர் மயங்­கிச் சரிந்­துள்­ளார். மயங்­கி­ய­வரை உற­வி­னர்­கள் உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ள­னர்.

அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.பலா­லியை சேர்ந்த குண­சீ­லன் குயின்­சன் (வயது-30) என்ற இளை­ஞன் நேற்­றுக் காலை தனது வீட்­டில் காலை உண­வாக பிட்­டுச் சாப்­பிட்­டுள்­ளார். பின்­னர் அவ­ருக்கு வாந்தி ஏற்­பட்­ட­து­டன் மயக்­க­ம­டைந்து வீழ்ந்­துள்­ளார்.

மயக்­க­ம­டைந்­த­வரை உட­ன­டி­யாக தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­துள்­ள­னர். அவர் உயி­ரி­ழந்து விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­ட­து­டன் சட­லம் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சங்­கானை

மன்­னார் பெரிய தம்­பம் பகு­தி­யைச் சேர்ந்த ராமன் இரா­ச­துரை (வயது-60) என்ற முதி­ய­வர் யாழ்ப்­பா­ணம் சங்­கானை தொட்­டி­ல­டிப்­ப­கு­தி­யில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்கு 20ஆம் திகதி வந்­துள்­ளார்.

தொட்­டி­ல­டிச் சந்­தி­யில் உள்ள பேருந்து நிலை­யத்­தில் பேருந்­துக்­காக காத்­துக் கொண்­டி­ருந்­துள்­ளார். திடீ­ரென மயங்கி வீழ்ந்­துள்­ளார். அவ்­வி­டத்­தில் நின்­ற­வர்­கள் உட­ன­டி­யாக சங்­கானை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்­பித்­துள்­ள­னர்.

எனி­னும் அவர் இறந்து விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­ட­து­டன் உடல் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இறப்பு விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் திடீர் இறப்ப விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.