ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்!

சேலம்- சென்னை 8 வழிச்சாலை போன்றவை வளர்ச்சிக்கு அவசியம் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் வரவேற்க தக்கது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்ற நிருபர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்து கூறுகையில், மக்களுடன் முதலில் பேச வேண்டும்.

இதை மக்கள் கேட்டிருந்தார்களேயானால், எங்களுக்கு உடனே ஆவண செய்யுங்கள், இந்த 8 வழிச் சாலை இல்லாமல் எங்கள் வாழ்க்கை தடம் புரண்டுவிடும் என்று, யாராவது சொன்னார்களா?, அல்லது சேலத்திற்கு போவதற்கு, இது ஒரு வழியேதான் உள்ளதா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. அவைகளை இவற்றை விட குறைந்த செலவில், விரைந்து முடிக்கும் வழிகளும் இருக்கின்றன.

பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அதையெல்லாம் கேட்காமல், இப்படித்தான், இதுதான் என மக்களை வற்புறுத்த முடியாது என கூறியுள்ளார்.