அயன்பாக்ஸ் வைத்து கிழித்துவிடுவேன்! வெடித்தது பிக்பாஸ் சர்ச்சை!

தற்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக உள்ளவர்கள் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த். அவர்கள் இருவரும் மிக மோசமான வகையில் வீட்டில் நெருக்கமாக நடந்துகொள்வதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ள மிட்நைட் மசாலா பகுதியில் மஹத்- யாஷிகா இருவரும் மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசிக்கொண்டனர்.

வீட்டின் தலைவரான மஹத் தூங்கிக்கொண்டிருந்த யாஷிகாவை எழுப்ப சென்றார். ஆனால் யாஷிகாவோ எழ முடியாது என அவருடன் வாக்குவாதம் செய்தார்.

அதன்பிறகு யாஷிகா மஹத்தை பார்த்து “உன் பர்ப்யூம் எடுத்து போய் நீச்சல் குளத்தில் அடித்து விடுவேன்… உன் ஜட்டியை அயன்பாக்ஸ் வைத்து கிழித்துவிடுவேன்” என பேசினார்.

இவர்கள் இப்படி பேசிக்கொள்வது அருவருக்கத்தக்க வகையில் இருபதாக ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.