கர்ப்பமாக இருக்கும் வேளையில் நடிகை ரம்பா செய்ததை பார்த்தீர்களா?- வைரல் புகைப்படம் பாருங்க

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.

2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்க போட்டார் ரம்பா. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இடையில் கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் பிரிந்து இருந்து அவர் இப்போது மீண்டும் கணவருடன் இணைந்துவிட்டார்.

இந்த நேரத்தில் ரம்பா 3வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன, அவரும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் தன்னுடைய குழுவுடன் Da-Bangg என்ற பெயரில் US மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். அவர்கள் டொராண்டோ வந்துள்ளனர் என்பதை அறிந்த ரம்பா, சல்மான் கான் மற்றும் அவரது குழுவினரை சந்திக்க நேரில் சென்றுள்ளார்.

நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக இருக்கும்வேளையிலும் பயணம் செய்து சல்மான்கானுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

அதோடு சல்மான் கான், சோனாக்ஷி, ஜாக்குலின், பிரபு தேவா போன்றோர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல்.