இந்தியாவில் பெண் ஒருவர் பைக்கிலிருந்து சறுக்கி பேருந்தில் சிக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறிப்பாக அந்தேரியில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதுமட்டுமின்றி இந்த மழையின் காரணமாக ஒருவர் பலியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மழை பெய்து கொண்டிருக்கும் சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், எதிர்பாரதவிதமாக பைக்கிலிருந்து சறுக்கி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.