இந்தியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ ராமயண எக்ஸ்பிரஸ்! 15,120 ரூபாய் கட்டணம்

இந்திய ரயில்வே திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீ ராமயண எக்ஸ்பிரஸ் கொழும்பு நோக்கி வரவுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 14ம் திகதி குறித்த ரயில் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. ராமர் பிறந்த இடமான அயோத்தியிலிருந்து குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

16 நாட்கள் இந்த சுற்றுலா பயணம் அமையவுள்ளது.

புதுடில்லியில் ஆரம்பமாகும் இந்த பயணம், நந்திகிராமம், ஜகான்பூர், வாரணாசி ஊடாக இராமேஸ்வரத்தை வந்தடையவுள்ளது. குறித்த ரயிலில் 800 பேர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள், விமானம் மூலம் கொழும்பு வரவுள்ளனர். இலங்கையில், ரம்பொட, நுவரெலியா, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவர்கள் செல்லவுள்ளனர்.

இந்த சுற்றுலா பயணத்திற்கு இந்தியாவில் மட்டும் நபர் ஒருவரிடம் இருந்து 15,120 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.