இரு நீர் நிலைகளில் பெண்களின் சடலம் மீட்பு!

நோர்வூட் சின்ன தரவலவத்தை பகுதியில் காசல் ரீ நீர்தேக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 70 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை அனுராதபுரம் திஸாவெவ குளத்தில் காணப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.