இந்த அறிகுறிகள் இருந்தால் சக்கரை நோய்க்கு தான்!

ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் இன்சுலின் சரியாக சுரக்காமல் போவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.இந்த வகையான நீரிழிவு நோய் குறித்து ஆய்வு செய்ததில் 7 முக்கியமான அறிகுறிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி அந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள்?

எப்போதும் தாகமான உணர்வை உணரக்கூடும்.இரவு நேரங்களில் அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். எப்போதும் மிகுந்த சோர்வை உணர்வது. உடல் எடை குறையும், குறிப்பாக தசையின் அளவு குறையும். பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைய காலத்தாமதமாகும். கண் பார்வை மிகவும் மங்கலாக தெரியும்.

நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகள்?

நீரிழிவு நோயினால் இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய்களில் அடைப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிப்படையும்.

குறிப்பு: மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பின் அதிகமாக ஏற்படுமெனவும் கூறப்படுகின்றது.