வைத்தியம் செய்ய பட்டப்படிப்பு தேவையில்லை என்று 14 வயது மாணவனால் செய்யப்பட்ட சத்திரச்சிகிச்சை

எம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.அது குறித்த தகவல்கள் பின்வருமாறு,

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் இருந்து பிரிந்த மாவட்டம் ஷாம்லி. இதன் ஆதர்ஷ் மண்டி பகுதியில் ’ஆர்யன் ஹாஸ்பிடல்’ எனும் பெயரில் ஒரு தனியார் வைத்தியசாலை பல வருடங்களாக  இயங்கி வருகிறது. இதன் காணொளி ஒன்று சில தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில்  ஒரு வாட்ஸ் அப் படப்பதிவு வெளியாகி வைரலானது. அதில், ஆர்யன் ஹாஸ்பிடல்’ எனும் தனியார் வைத்தியசாலையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காணொளியைப் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, அதில் இருந்தவர்கள் யாருமே அந்த அறுவை சிகிச்சை செய்யத் தகுதியில்லாதவர்கள் ஆவர். இதில் அறுவை சிகிச்சை செய்பவர், அந்த வைத்தியசாலையின் உரிமையாளர் நர்தேவ்சிங்கின் மகன் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அருகில் இருந்த ஒரு செவிலியர் நோயாளியின் முதுகுத்தண்டில் மயக்க ஊசி போடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. வேறு இருவரும் அக்காட்சியில் அருகில் நிற்கின்றனர்.

d 1

இதை கண்ட பலரும் அதிர்ச்சியுற்றனர். இன்னும் சிலர் அது உண்மையான காணொளியாக இருக்காது எனக் கருதி அலட்சியம் காட்டினர். எனினும், அப்பகுதிவாசிகளால் அந்த பதிவு லக்னோவில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து, லக்னோவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆர்யன் வைத்தியாலைக்கு  ஒரு அதிகாரிகள் குழு நேரில் கிளம்பி வந்தது. அப்போது அப்பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியும் அங்கு வந்து அதிகாரிகளிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். எனினும், அதிகாரிகள் குழு அந்தக் காணொளி  பொய்யானது என நிரூபிக்க ஆர்யன் வைத்தியசாலைக்கு மூன்று நாள் அவகாசம் அளித்து சென்றுள்ளது. இது நேற்றுமுன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், அடங்கி இருந்த விஷயம் நேற்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ஷாம்லி மாவட்ட அரசு உதவி தலைமை மருத்துவ அதிகாரி அசோக்குமார் ஹண்டா கூறும்போது, ‘காணொளியில்  இடம் பெற்ற காட்சி அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானது. எனவே, ஆரியன் வைத்தியசாலைக்கு  சீல் வைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. இந்த காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைத்தியசாலைக்கு  ஏற்கனவே மூன்று முறை சீல் வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் ஆரியன் வைத்தியசாலையில் சுமார் 25 பேர் தவறான சிகிச்சையால் உயிர் இழந்துள்ளனர். எனினும், தமக்கு  உத்தரப்பிரதேச அரசியல்வாதிகளிடம் உள்ள செல்வாக்கின் காரணமாக உரிமையாளர் நர்தேவ்சிங் கைதாகாமல் தப்பி வருகிறார். எனினும், நான்கு குடும்பங்கள் ஆரியன் வைத்தியசாலை மீது ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மீதான வழக்குகள் ஷாம்லி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.