அம்பாறை – அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள 7 மாணவர்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் விசமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனமுற்ற 7 மாணவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 மாணவர்களும் 2 மாணவிகளும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆலையடிவேம்பில் பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புப் பண்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை உட்கொண்ட சில மாணவர்கள் வாந்தி, வயிறுவலி போன்ற அறிகுறிகளுடன் சுகயீனமடைந்துள்ளதுடன்,
மேலும், அவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது